"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 10"
1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:
அர்த்தனாரி,ஆரவல்லி சூரவல்லி,உதயணன் வாசவதத்தா, குமரகுரு, குண்டலகேசி, சகடயோகம், சுபத்ரா, ஸ்ரீ முருகன், ராம் ரஹிம், வைங்கி, வால்மீகி, வித்யாபதி, விஜயலட்சுமி, விகடயோகி ஆகியவை.
இவற்றில் குறிப்பிடத் தகுந்த அளவு பிரபலாமான படங்கள் எதுவும் இல்லை, அவை பற்றிய குறிப்புகளும் இல்லை. ஸ்ரீ முருகன் என்ற படத்தில்படத்தில் திருஎம்ஜி ஆர் நடித்தது மட்டுமே ஓர் குறிப்பிடத் தக்க செய்தி. இந்த படத்தில் அவர் சிவனாகத் தோன்றி ஆடிய நடனத்தைப்நடனத்தைப் பார்த்து அவருக்கு தங்களது அடுத்த படத்திலும் இதன் தயாரிப்பாளர்களானதயாரிப்பாளர்களான ஜூபிடர் பிக்சர்ஸ் அவருக்கு வாய்ப்பளித்தனர். அதுதான் "ராஜகுமாரி". அதன் பின்னர் நடந்ததை தமிழ்நாடே அறியும்.
1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஏகம்பவாணன், கஞ்சன், கன்னிகா, கடகம், கங்கணம், குண்டலகேசி, சண்பகவல்லி, சித்ரபகாவலி, சுறுசுறுப்பு, சுலாசனா, தன அமராவதி, தாய்நாடு, தியாகி, துளசி ஜலந்தர், தெய்வ நீதி, நாம் இருவர், பக்த துளதிதாஸ், பங்கஜவல்லி, பிரம்மரிஷி விஸ்வாமித்ரா, பைத்தியக்காரன், பொன்னருவி, மதனமாலா
மகாத்மா உதங்கர், மலைமங்கை, மிஸ் மாலினி, ராஜகுமாரி, ஸ்ரீ லட்சுமி விஜயம், விசித்ர வனிதா, வீர வனிதா, வேதாளபுரம், ஜம்பம், ருக்மாங்கதன், ஜீவஜோதி ஆகியவை.
இவற்றுள் நன்கு பிரபலாமான 2 படங்களைப பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1. நாம் இருவர்: டி ஆர் மகாலிங்கம், பி ஆர் பந்துலு, வி கே ராமசாமி,கே சாரங்கபாணி, டி ஆர் ராமச்சந்திரன், டி கே ராமச்சந்திரன், டி ஏ ஜெயலக்ஷ்மி, பேபி கமலா ஆகியோர் நடித்திருந்தனர். இது அப்போது பின்னாளில் இயக்குனராக புகழ்பெற்ற ப நீலகண்டன் அவர்களின் "த்யாக உள்ளம்" என்ற மேடை நாடகத்தின் திரை வடிவமாகும். இப்படத்திற்கு அவரேஅவரே கதாசிரியராகவும், துணை இயக்குனராகவும் நியமிக்கப் பட்டார்.
இதில் கதாநாயகனாக நடிக்க முதலில் எஸ் வி சஹஸ்ரநாமம்தான் தெரிந்தேடுகப்பட்டார். ஆனால், என் எஸ் கே அவர்களின் கொலை வழக்கினால், அவரால் படப் பிடிப்பில் கலந்து கொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டபோது, ஏ வி மெய்யப்பன் அவர்கள் டி ஆர் மகாலிங்கத்தை கதாநாயகனாக்கினார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த டி ஏ ஜெயலக்ஷ்மி காதாநாயகி. பி ஆர் பந்துலு, இளகியமனம் படைத்த கதாநாயகனின் அண்ணனாக நடித்திருந்தார். கதாநாயகனின் தங்கையாக நடித்த
பேபி கமலாதான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற நடிகையாகவும், நாட்டியத் தாரகையாகவும் விளங்கிய குமாரி கமலா.
1947 ஆம் ஆ ண்டில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. மெய்யப்பன், மகாத்மாவிற்கு மக்களிடையே இருந்த பெரும் வரவேற்பை இப்படத்தில் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டார். மகாத்மாவின் சிலைசிலை, காந்தி குல்லாய் அணிந்த நடிகர்கள், ராட்டை சுற்றுவது, ஜெய் ஹிந்த் என்று சொல்லி ஒருவரை ஒருவர் வாழ்த்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. பாரதியாரின் பாடல்களான, "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" "வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே" போன்ற பாடல்கள் திருமதிடி கே பட்டம்மாள் பாட, பேபி கமலா நடனத்தில் பெருத்த வரவேற்பைப் பெற்றன.
இப்படம் AVM நிறுவனத்தை புகழேணியின் உச்சிக்கு கொண்டு சென்றது தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாகும்.
2. மிஸ் மாலினி: இதில் கொத்தமங்கலம் சுப்பு, புஷ்பவல்லி, சுந்தரிபாய், என் சீதாராமன் (பின்னாளில் ஜாவர் சீதாராமன்), ஆர் கணேசன் என்ற ஜெமினி கணேசன் (அறிமுகம்) ஆகியோர் நடித்திருந்தனர். இது புகழ் பெற்ற எழுத்தாளர் திரு ஆர் கே நாராயணன் அவர்களின் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. படித்தவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தபோதிலும் பாமர மக்களை கவரவில்லையாதலால், பெரும் வெற்றியை எட்டவில்லை. பின்னாளில் வாசன் இதைப் பற்றிக் குறிப்பிடுகையில், அறிவுஜீவிகளுக்காக படம் எடுத்தால் பணம் சம்பாதிக்க இயலாது என்று கூறினார்.
அடுத்த தொடரில் 1948 ஆம் ஆண்டு வெளி வந்த சில படங்களைப் பற்றி காண்போம்.
நன்றி வணக்கம்.
புகைப்படங்கள்: 1. ஸ்ரீ முருகன். 2. நாம் இருவர். 3 மிஸ் மாலினி
(COURTESY: THE HINDU AND RANDOR GUY)
:
1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:
அர்த்தனாரி,ஆரவல்லி சூரவல்லி,உதயணன் வாசவதத்தா, குமரகுரு, குண்டலகேசி, சகடயோகம், சுபத்ரா, ஸ்ரீ முருகன், ராம் ரஹிம், வைங்கி, வால்மீகி, வித்யாபதி, விஜயலட்சுமி, விகடயோகி ஆகியவை.
இவற்றில் குறிப்பிடத் தகுந்த அளவு பிரபலாமான படங்கள் எதுவும் இல்லை, அவை பற்றிய குறிப்புகளும் இல்லை. ஸ்ரீ முருகன் என்ற படத்தில்படத்தில் திருஎம்ஜி ஆர் நடித்தது மட்டுமே ஓர் குறிப்பிடத் தக்க செய்தி. இந்த படத்தில் அவர் சிவனாகத் தோன்றி ஆடிய நடனத்தைப்நடனத்தைப் பார்த்து அவருக்கு தங்களது அடுத்த படத்திலும் இதன் தயாரிப்பாளர்களானதயாரிப்பாளர்களான ஜூபிடர் பிக்சர்ஸ் அவருக்கு வாய்ப்பளித்தனர். அதுதான் "ராஜகுமாரி". அதன் பின்னர் நடந்ததை தமிழ்நாடே அறியும்.

1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஏகம்பவாணன், கஞ்சன், கன்னிகா, கடகம், கங்கணம், குண்டலகேசி, சண்பகவல்லி, சித்ரபகாவலி, சுறுசுறுப்பு, சுலாசனா, தன அமராவதி, தாய்நாடு, தியாகி, துளசி ஜலந்தர், தெய்வ நீதி, நாம் இருவர், பக்த துளதிதாஸ், பங்கஜவல்லி, பிரம்மரிஷி விஸ்வாமித்ரா, பைத்தியக்காரன், பொன்னருவி, மதனமாலா
மகாத்மா உதங்கர், மலைமங்கை, மிஸ் மாலினி, ராஜகுமாரி, ஸ்ரீ லட்சுமி விஜயம், விசித்ர வனிதா, வீர வனிதா, வேதாளபுரம், ஜம்பம், ருக்மாங்கதன், ஜீவஜோதி ஆகியவை.
இவற்றுள் நன்கு பிரபலாமான 2 படங்களைப பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1. நாம் இருவர்: டி ஆர் மகாலிங்கம், பி ஆர் பந்துலு, வி கே ராமசாமி,கே சாரங்கபாணி, டி ஆர் ராமச்சந்திரன், டி கே ராமச்சந்திரன், டி ஏ ஜெயலக்ஷ்மி, பேபி கமலா ஆகியோர் நடித்திருந்தனர். இது அப்போது பின்னாளில் இயக்குனராக புகழ்பெற்ற ப நீலகண்டன் அவர்களின் "த்யாக உள்ளம்" என்ற மேடை நாடகத்தின் திரை வடிவமாகும். இப்படத்திற்கு அவரேஅவரே கதாசிரியராகவும், துணை இயக்குனராகவும் நியமிக்கப் பட்டார்.
இதில் கதாநாயகனாக நடிக்க முதலில் எஸ் வி சஹஸ்ரநாமம்தான் தெரிந்தேடுகப்பட்டார். ஆனால், என் எஸ் கே அவர்களின் கொலை வழக்கினால், அவரால் படப் பிடிப்பில் கலந்து கொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டபோது, ஏ வி மெய்யப்பன் அவர்கள் டி ஆர் மகாலிங்கத்தை கதாநாயகனாக்கினார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த டி ஏ ஜெயலக்ஷ்மி காதாநாயகி. பி ஆர் பந்துலு, இளகியமனம் படைத்த கதாநாயகனின் அண்ணனாக நடித்திருந்தார். கதாநாயகனின் தங்கையாக நடித்த
பேபி கமலாதான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற நடிகையாகவும், நாட்டியத் தாரகையாகவும் விளங்கிய குமாரி கமலா.

1947 ஆம் ஆ ண்டில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. மெய்யப்பன், மகாத்மாவிற்கு மக்களிடையே இருந்த பெரும் வரவேற்பை இப்படத்தில் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டார். மகாத்மாவின் சிலைசிலை, காந்தி குல்லாய் அணிந்த நடிகர்கள், ராட்டை சுற்றுவது, ஜெய் ஹிந்த் என்று சொல்லி ஒருவரை ஒருவர் வாழ்த்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. பாரதியாரின் பாடல்களான, "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" "வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே" போன்ற பாடல்கள் திருமதிடி கே பட்டம்மாள் பாட, பேபி கமலா நடனத்தில் பெருத்த வரவேற்பைப் பெற்றன.
இப்படம் AVM நிறுவனத்தை புகழேணியின் உச்சிக்கு கொண்டு சென்றது தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாகும்.
2. மிஸ் மாலினி: இதில் கொத்தமங்கலம் சுப்பு, புஷ்பவல்லி, சுந்தரிபாய், என் சீதாராமன் (பின்னாளில் ஜாவர் சீதாராமன்), ஆர் கணேசன் என்ற ஜெமினி கணேசன் (அறிமுகம்) ஆகியோர் நடித்திருந்தனர். இது புகழ் பெற்ற எழுத்தாளர் திரு ஆர் கே நாராயணன் அவர்களின் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. படித்தவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தபோதிலும் பாமர மக்களை கவரவில்லையாதலால், பெரும் வெற்றியை எட்டவில்லை. பின்னாளில் வாசன் இதைப் பற்றிக் குறிப்பிடுகையில், அறிவுஜீவிகளுக்காக படம் எடுத்தால் பணம் சம்பாதிக்க இயலாது என்று கூறினார்.

அடுத்த தொடரில் 1948 ஆம் ஆண்டு வெளி வந்த சில படங்களைப் பற்றி காண்போம்.
நன்றி வணக்கம்.
புகைப்படங்கள்: 1. ஸ்ரீ முருகன். 2. நாம் இருவர். 3 மிஸ் மாலினி
(COURTESY: THE HINDU AND RANDOR GUY)
:
No comments:
Post a Comment